Wednesday, September 1, 2010

loading,unloading problem

பாண்டிச்சேரியில் சமீப காலமாக சுமை இறக்குவோர் சங்கங்களால் பல பிரச்னை உருவாகி வருகின்னறன. வீட்டை காலி செய்வோர்ரிடம் அதிக கூலி கேட்பதாகவும், அவர்களே ஆட்கள் வைத்து இறக்கினாள், அவர்களை மீரட்டுவது, வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் இறக்கினால் அவரகலேடம் அதிக கூலி கேட்டு மீரட்டுவது,தொழிற்சாலைக்கு  வரும் பொருட்களை  இறக்குவதில் அதிக கூலி, மாமுல் கேட்டு மீரட்டுவது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனை பாண்டிச்சேரி வணிக அவை கவனத்திக்கு பல அமைப்புகள் கொண்டு வந்தன. வணிக அவை தலைவர் திரு M .சிவசங்கர் இது குறித்து ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்தார். 14 மெம்பர் கொண்ட கூட்டு நடவடிக்கை கமிட்டி ஏற்படுத்த பட்டது. அக் கமிட்டி பல கூட்டங்கள் நடத்தி நேற்றைய தினம் ஒரு பத்தரிகையாளர் சந்திர்ப்புக்கு ஏற்பாடு செய்தது. அதில் வரும் 08 /09 /2010 க்குள் வீடு மாறுவோர் தமக்கு சுமை தூக்குவோர் அமைப்பால் ஏற்பட்ட இன்னல்களை கடிதம் மூலம் தெரிவிக்கவும்,குடியிருப்போர் சங்கங்கள் தங்கள் மெம்பர்க்கு ஏற்பட்ட அனுவங்களை வணிக அவைக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்ள பட்டனர். வரும் 13 /09 /2010  அன்று ஊர்வலமாக சென்று முதல் அமைச்சரரை சந்தித்து கேரளாவில் உள்ளது போல சட்டம் கொண்டு வர மனு தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவிக்க பட்டது.

No comments:

Post a Comment